எந்த மாதிரி கதையைக் கொண்ட படம் ஓடும், எது ஓடாது என்பதற்கு சில பைனான்சியர்கள் தரும் வியாக்கியானம் வேடிக்கையாக இருக்கும். இந்தக் கணிப்பில் அனுபவசா லிகள் கூட ஏமாந்திருக்கிறார்கள்.
மறைந்த ஜாவர் சீதாராமண் அவர்கள் நல்ல எழுத்தாளர். சிந்தனையாளர். ஒரு டிஸ்ட்ரிபியூட்டருடைய யோசனையை கேட்டு, சிவாஜி அவர்கள் நடித்த படங்களான, "பாகப்பிரிவினை", படிக்காத மேதை " இரண்டையும் மிக்ஸ் பண்ணி "வளர்பிறை" என்ற பெயரில் சிவாஜியை வைத்தே படம் எடுத்தார். படம் தோல்வி அடைந்தது.
அடுத்து நட்சத்திர தேர்வு. கதைக்கு ஏற்ற நடிகர் யார் , நடிகை யார் என்று யோசிப்பதற்குள், "இந்த நட்சத்திரத்தை போடுங்க, இவரைப் போடாதீங்க" என்று அதிலும் தலையிடுவார். அப்புறம் தாங்கள் சொன்னதையே திடீரென்று மாற்றிக் கொள்வார்கள் .
கதையிலும் சில சமயங்களில் பைனான்சியர் தலையீடு இல்லாமல் தப்பாது.
"இந்த சப்ஜெக்ட் சரி இல்ல, பேசாம இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக எடுத்து விடுங்கள். இப்போப் பாருங்க. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் உள்ள படங்கள்தான் பிச்சுக்கிட்டு போகுது. " என்பார்கள்.
என்ன செய்வது பாவம்! , அவர் சொல்படிதான் தயாரிப்பாளர் கேட்டாக வேண்டும்.பைனான்ஷியராயிற்றே? இப்படியெல்லாம் ஒரு படத்தை தயாரிக்கும்முன்னயே பிரச்சினைகள் ஆரம்பமாகி விடுகின்றன.
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.10.81 இதழ்)